/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மக்காச்சோளத்தில் மகத்தான வருவாய்
/
மக்காச்சோளத்தில் மகத்தான வருவாய்
PUBLISHED ON : ஆக 14, 2019

மக்காச்சோளம் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், தலக்காஞ்சேரி கிராமத்தைச்சேர்ந்த விவசாயி, எஸ்.சந்துரு கூறியதாவது:
நான் ஏற்கனவே, 50 சென்ட் நிலத்தில், ஊடுபயிராக மக்காச்சோளம் சாகுபடி செய்தேன். கிடைத்த மகசூல், மக்காச்சோளத்தை, எண்ணிக்கையில் விற்பனை செய்துவிட்டேன். அதில், 20 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்தது.
அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 2 ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளேன்.
இதில், படைப்புழு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதை கட்டுப்படுத்தி வருகிறேன். இந்த பூச்சி கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை முறையாக கையாண்டால், 1 ஏக்கருக்கு, 25 மூட்டை மகசூல் பெறலாம். இதில், 50 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.
தொடர்புக்கு: 98947 05771

