sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

எலுமிச்சம் பழங்களில் பழத்துருச் சிலந்தி நோய்

/

எலுமிச்சம் பழங்களில் பழத்துருச் சிலந்தி நோய்

எலுமிச்சம் பழங்களில் பழத்துருச் சிலந்தி நோய்

எலுமிச்சம் பழங்களில் பழத்துருச் சிலந்தி நோய்


PUBLISHED ON : செப் 05, 2018

Google News

PUBLISHED ON : செப் 05, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலுமிச்சை பழங்கள் துருப்பிடித்தது போன்று பழுப்பு நிறத்தில் இருக்கிறதா? பழுப்பு நிறப் பகுதியினை சுரண்டிப் பார்த்தால் உள்ளே பச்சையாக உள்ளதா?

துருப்பிடித்தது போன்ற உள்ள பழங்களில் உள்ள பழச்சாற்றின் அளவும், ருசியும் எவ்வித மாற்றமும் இல்லையா?

அப்படியாயின் உங்கள் எலுமிச்சம் பழங்கள் பழத்துருச் சிலந்தியால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதனால் ஏற்பட்ட பாதிப்பினை 'வங்கு நோவு' என்றும் கூறுவர். எலுமிச்சை சாகுபடிக்கும் பெயர் பெற்ற புளியங்குடி பகுதியில் தான் 1985ம் ஆண்டு பழத்துருச் சிலந்தியினால் ஏற்பட்ட பாதிப்பு முதல் முதலில் கண்டறியப்பட்டது. இந்நோய் உருப்பெருக்கி கொண்டு தான் காண இயலும்.

பழத்துருச்சிலந்தியின் இளம் பருவங்களும், முதிர்ந்த பருவங்களும் எலுமிச்சம் பிஞ்சு, காய் மற்றும் பழங்களின் மேல் தோலினை சுரண்டி சாறு உண்கின்றன.

இதனால் மேல் தோல் திசுக்கள் காய்ந்து பழுப்பு நிறமாக மாறுகின்றன. இதனால் எலுமிச்சம் பழங்களுக்கே உரிய மங்களகரமான பொன்னிறமான மஞ்சள் நிறத்தினை இழப்பதால் குறைந்த விலைக்கே போகின்றன. அதனால் எலுமிச்சை சாகுபடியாளர்களின் வருமானம் வெகுவாக பாதிக்கப்படுகிறது.

கட்டுப்படுத்தும் முறை

காய்ப்பருவத்தில் சீரிய கண்காணிப்பு அவசியம். ஒன்றிரண்டு பழங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவற்றினை உடனுக்குடன் அப்புறப்படுத்தி அழித்து விட வேண்டும்.

பாதிப்பு தீவிரபட்டால் டைக்கோபால் (வணிக பெயர்கள்: கெல்தேன், டெல்கோபால்) அல்லது நனையும் கந்தகம் (வெட்டபிள் சல்பர்) என்ற மருந்துகளின் ஏதேனும் ஒன்றினை மட்டும் தெளிக்க வேண்டும்.

டைக்கோபால் எனில் 100 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி மருந்து வீதம் சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும். நனையும் கந்தகம் எனில் 100 லிட்டர் தண்ணீருக்கு 300 கிராம் மருந்து வீதம் சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும்.

மருந்துக்கரைசல் எலுமிச்சம் பிஞ்சு, காய் மற்றும் பழங்களின் மீது நன்கு பரவி படிவதற்காக சாண்டோவிட், இன்டரான் போன்ற வேளாண்மைக்கான திரவசோப்பு கரைசல்களில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு அரை மில்லி வீதம் சேர்த்து கலக்கி கொண்டு பயன்படுத்தலாம்.

- முனைவர் ரா.விமலா தலைவர்

பருத்தி ஆராய்ச்சி நிலையம்

ஸ்ரீவில்லிபுத்துார்.







      Dinamalar
      Follow us