sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

வெள்ளாடுகளின் பழக்க வழக்கங்கள்

/

வெள்ளாடுகளின் பழக்க வழக்கங்கள்

வெள்ளாடுகளின் பழக்க வழக்கங்கள்

வெள்ளாடுகளின் பழக்க வழக்கங்கள்


PUBLISHED ON : ஜூன் 05, 2019

Google News

PUBLISHED ON : ஜூன் 05, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆட்டுப்பண்ணை அமைக்க குறைந்த முதலீடு, உடனடி விற்பனை மற்றும் ஏறுமுகமாக உள்ள ஆட்டின் இறைச்சி விலை இத்தனை காரணங்களும் ஆடு வளர்ப்பதற்கு ஆர்வத்தை துாண்டுகின்றன. மற்ற கால்நடைகளை ஒப்பிடும் போது வெள்ளாடுகள் தீவனங்களை தேடி உண்பதில் மிகவும் திறமையானவை. அவை இளந்தளிர் இலை தழைகளையே விரும்பி சாப்பிடும். முற்றிய தாவர இலைகளை ஒதுக்கி விடும். இளம் தளிர் இலைகளில் 'டேனின்' என்று சொல்லக்கூடிய ரசாயனப்பொருள் கூடுதலாக உள்ளது.

இது தீவனவத்தில் புரதச்சத்தின் பயன்பாட்டை குறைக்கும். எனவே வெள்ளாடுகளுக்கு தளிரான இலை தழைகளை தீவனமாகக் கொடுக்கக்கூடாது. வெள்ளாடுகள் எப்போதுமே பின்னங்கால்களை திடமாக ஊன்றிக் கொண்டு முன்னங்கால்களால் கிளைகளை வளைத்து வேண்டிய மட்டும் சாப்பிடும். தரை மட்டத்தில் அவற்றுக்கு தீவனமிட்டால் முன்னங்கல்களை மடக்கி தீவனம் உட்கொள்ளும்.

இப்படி செய்வதன் மூலம் அதிகளவு தீவனங்களை அவற்றால் சாப்பிட இயலாது. வெள்ளாடுகளுக்கு வெகு விரைவில் குறிப்பிட்ட தீவனம் அலுப் புத்தட்டி விடும். எனவே பல்சுவை உடைய தீவனம் அவற்றுக்குத் தேவைப்படுகிறது.

மற்ற கால்நடைகளை போல் அல்லாமல் தங்களுக்கு எந்தக் குறிப்பிட்ட தாவரத்தின் பகுதி பிடிக்கிறதோ அதனையே சாப்பிடும். வெள்ளாடுகளுக்கு புல், பூண்டுகளில் உள்ள பூக்களைச் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும்.

செம்மறியாடுகளை ஒப்பிடும் போது வெள்ளாடுகள் ஒரு நாளில் பல தடவை தீவனம் உண்ணும். இதனால் வெள்ளாடுகளுக்கு ஒரு நாளைக்கு தேவையான தீவனத்தை 5 பகுதிகளாக பிரித்து கொடுக்க வேண்டும். கசப்பு சுவை என்றால் வெள்ளாடுகளுக்கு அல்வா சாப்பிடுவது போல் தான். எனவே கசப்பு சுவை கொண்ட வேப்பிலைகளை அதிகமாக தீவனத்தில் பயன்படுத்தலாம்.

வெள்ளாடுகள் தீவனம் சாப்பிடுவதில் அதிக நேரம் செலவிடும். இந்த சமயத்தில் அவற்றை தொந்தரவு செய்யக்கூடாது. செம்மறி ஆடுகளை விட வெள்ளாடுகள் தீவனத்தை அதிக விரயமாக்கும் தன்மை உடையவை.

வெள்ளாடுகளுக்கு சோடியம் என்ற தாது உப்புச்சத்து அதிகளவில் தேவைப்படும். வெள்ளாடுகள் இரவு நேரத்தில் குடிக்கும் தண்ணீரின் அளவைப்போல பகல் நேரங்களில் நான்கு மடங்கு தண்ணீர் குடிக்கும்.

பண்ணையாளர்கள் வெள்ளாடுகளின் இக்குணங்களை கருத்திற்கொண்டு, அவற்றை பராமரிப்பதன் மூலம் தக்க லாபம் பெறலாம். பொருளாதார முன்னேற்றம் காணலாம். தொடர்புக்கு 94864 69044.

- டாக்டர் வி.ராஜேந்திரன்

முன்னாள் இணை இயக்குனர்

கால்நடை பராமரிப்புத்துறை







      Dinamalar
      Follow us