PUBLISHED ON : ஏப் 10, 2019

தமிழகத்தில் சமீப காலமாக வெளிமாநில தரமற்ற விதைகளால் விவசாயிகள் மகசூல் பாதிப்பு அடைவதை கண்கூடாக காண முடிகிறது.
காய்கறி விதைகளில் 2,269 ரகங்களும், நெல் விதைகளில் 131 ரகங்களும், பயறு வகைகளில் 96 ரகங்களும், சிறுதானியங்களில் 115 ரகங்களும் பருத்தியில் 43 ரகங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. விதைகளின் உற்பத்தி திறன் எந்த பருவநிலைக்கு ஏற்றது. விதைகளின் குணாதிசயங்கள், உற்பத்தியாளர் சான்று உட்பட அனைத்து விபரங்களும் பெறப்பட்டுள்ளது. புதிதாக பதிவு எண் பெற்றுள்ள விதைகளின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, விதை விற்பனை பதிவு எண் பெறும்போது குறிப்பிட்டிருந்த விதைகளின் குணாதியசங்கள் மாறுபட்டிருந்தால் விற்பனைக்கு தடை விதிக்கலாம். எனவே போலி விதைகள் வாங்கி ஏமாற வேண்டாம்.
விவசாயிகள் விதைகள் வாங்கும்போது அவற்றின் பதிவு அட்டை, சான்று அட்டை விபரங்களை சரிபார்த்து வாங்கிட வேண்டும். சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் விதைகளில் அவற்றின் ரகங்கள், முளைப்புத்திறன், ஈரப்பதம், காலாவதி எண், சரியான விலை உள்ளிட்டவை அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.
இவற்றை எல்லாம் சரிபார்த்து விவசாயிகள் விதைகளை வாங்கி பயன்பெற வேண்டும்.
-எஸ்.சந்திரசேகரன், வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை, 94435 70289

