/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
ட்ரோன் மூலம் மக்காச்சோளத்திற்கு மருந்து தெளிக்கலாம்
/
ட்ரோன் மூலம் மக்காச்சோளத்திற்கு மருந்து தெளிக்கலாம்
ட்ரோன் மூலம் மக்காச்சோளத்திற்கு மருந்து தெளிக்கலாம்
ட்ரோன் மூலம் மக்காச்சோளத்திற்கு மருந்து தெளிக்கலாம்
PUBLISHED ON : ஜன 01, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை பயிர் வினையியல் துறை மூலம் திரவ மக்காச்சோள மேக்சிம் வெளியிடப்பட்டுள்ளது. மக்காச்சோளத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகள், வளர்ச்சி ஊக்கிகள் கலந்த இத்திரவத்தை ட்ரோன் மூலம் தெளிக்கலாம். இதற்கு ஏக்கருக்கு ஒரு லிட்டர் அளவு தேவைப்படும். பூக்கும் பருவம், மணி பிடிக்கும் பருவத்தில் 19 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் மேக்சிம் திரவம், 20 மில்லி ஒட்டும் திரவம் கலந்து ட்ரோன் மூலம் தெளிக்க வேண்டும்.
இதன் மூலம் மணிபிடிக்கும் திறன் அதிகரித்து விளைச்சல் 20 சதவீதம் கூடும். ஊட்டச்சத்துகளை உட்கிரகித்து வறட்சியை தாங்கும் தன்மை அதிகரிக்கும். அலைபேசி: 0422 - 661 1243.