sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

பப்பாளியில் மாவுப்பூச்சி கட்டுப்பாட்டு முறைகள்

/

பப்பாளியில் மாவுப்பூச்சி கட்டுப்பாட்டு முறைகள்

பப்பாளியில் மாவுப்பூச்சி கட்டுப்பாட்டு முறைகள்

பப்பாளியில் மாவுப்பூச்சி கட்டுப்பாட்டு முறைகள்


PUBLISHED ON : ஜூன் 29, 2016

Google News

PUBLISHED ON : ஜூன் 29, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதல் அறிகுறிகள் இருந்தால் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து தோட்டக்கலைத்துறையின் வேளாண் அலுவலர்கள் களப்பயிற்சி அளித்து வருகின்றனர்.

பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்: தாக்கப்பட்ட இலை மற்றும் காய்களில் வெண்ணிற பஞ்சால் மூடப்பட்டது போல் காணப்படும்.

மஞ்சள் நிறமான காய்ந்த, வளைந்து, நெளிந்த வளர்ச்சி குன்றிய குருத்துகள் காணப்படும். சிவப்பு மற்றும் கருப்பு எறும்புகளின் நடமாட்டம் இருக்கும். பளபளப்பான ஒட்டும் தன்மை கொண்ட தேன் போன்ற திரவம் இலை மற்றும் இதர பாகங்களில் தென்படும். தேன் போன்ற திரவத்தின் மேல் 'கேப்னோடியம்' எனப்படும் கரு நிற பூசணம் படர்ந்திருக்கும்.

கட்டுப்படுத்தும் மேலாண்மை: பூச்சி தாக்கப்பட்ட பப்பாளி மரங்கள் மற்றும் களைச் செடிகளை அழித்து வயல்களை சுத்தமாக வைக்க வேண்டும். தாக்குதல் குறைவாக இருக்கும்போதே தேவையான கட்டுப்பாட்டு முறைகளை கையாள வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீருடன் 5 சதவிகிதம் வேப்பங்கொட்டைச்சாறு (10 கிலோ / எக்டருக்கு) என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும் அல்லது மீன் எண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 15 கிராம் வீதம் கலந்து அதனுடன் 5 முதல் 10 மில்லி ஒட்டும் திரவம் சேர்த்து தெளித்தல். 'தயோமீத்தாக்சாம்' 2 கிராம் மருந்தினை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தல். குளவி ஒட்டுண்ணியான 'அசிரோபேகஸ் பப்பாயினை' வயலில் விட்டு கட்டுப்படுத்ததுல் (ஏக்கருக்கு 50 எண்கள் வீதம்) போன்ற வழிமுறைகளை கையாண்டால் பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியும்.

- பூபதி, தோட்டக்கலை துணை இயக்குனர், மதுரை.






      Dinamalar
      Follow us