/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
சந்தையில் அதிக விலை போகும் ஊதா நிற அவரைக்காய்
/
சந்தையில் அதிக விலை போகும் ஊதா நிற அவரைக்காய்
PUBLISHED ON : நவ 27, 2024

ஊதா நிற அவரை சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது:
காய்கறி, கீரை உள்ளிட்ட பலவித காய்கறிகளை ரசாயன உரம் இன்றி விளைவித்து வருகிறேன். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை எடுத்துக் கொண்டு, மீது காய்கறிகளை விற்பனை செய்து விடுகிறேன்.
மணல் கலந்த களிமண் பூமியில், பலவித அவரைக்காய் ரகங்களை சாகுபடி செய்து வருகிறேன்.
மணல் கலந்த களிமண்ணுக்கு, ஊதா நிற அவரைக்காய் நன்றாக வருகிறது.
குறிப்பாக, ஆடி, ஆவணி மாதங்களில், அவரை விதை விதைக்க வேண்டும்.
அப்போது தான், புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் அதிக கொடி படர்ந்து, அவரைக்காய்கள் நிறைய காய்க்கும். இந்த ஊதா நிற அவரைக்காயில் அதிக சத்து நிறைந்து இருப்பதால், பிற அவரைக்காயை காட்டிலும் மகத்துவம் வாய்ந்தது.
ஊதா நிற அவரைக்காய், நிறத்தில் வித்தியாசமாக இருப்பதால், சந்தையில் கூடுதலாக விலை கொடுத்தும் வாங்க, மக்கள் தயக்கம் காட்டுவதில்லை.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு: பி.குகன், 94444 74428.