
பால் பொருட்கள் தயாரிப்புகாஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் கிராமத்தில், உழவர் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, பால் பொருட்கள் தயாரிப்பு குறித்து, நாளை, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அனைவரும் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.தொடர்புக்கு: 044 - 2726 4019
மீன் வளர்ப்புசெங்கல்பட்டு அடுத்த, பொத்தேரி காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், நாளை மற்றும் நாளை மறு தினம், மீன் வளர்ப்பு மற்றும் மதிப்பு கூட்டிய தயாரிப்பு குறித்து, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், பங்குபெற விரும்புவோர் நேரில் அணுகலாம்.தொடர்புக்கு: 044 - 2745 2371
திருவள்ளூர் மாவட்டம், திரூரில் வேளாண் அறிவியல் நிலையம் உள்ளது. இங்கு, நாளை மறுதினம், லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து, கட்டண பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், படித்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பு விவசாயிகளும் பங்கேற்கலாம். இதற்கு, முன்பதிவு செய்யலாம்.தொடர்புக்கு: 94424 85691

