sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

தக்காளியை தாக்கும் புள்ளி வாடல் நோய்

/

தக்காளியை தாக்கும் புள்ளி வாடல் நோய்

தக்காளியை தாக்கும் புள்ளி வாடல் நோய்

தக்காளியை தாக்கும் புள்ளி வாடல் நோய்


PUBLISHED ON : மார் 20, 2019

Google News

PUBLISHED ON : மார் 20, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தக்காளி பயிரில் புள்ளிவாடல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதா? என்பதை விவசாயிகள் கவனிக்க வேண்டும். இந்நோய் வைரஸ் மூலம் தோன்றும். இவற்றின் அறிகுறிகளாக இலைகள், தண்டு மற்றும் பழங்களில் கோடுகள் காணப்படும். சிறிய, கருப்பு, வட்ட புள்ளிகள் இளம் இலைகளில் தோன்றும். இலைகள் அடர் பழுப்பு நிறமாக மாறுகின்றன. பழங்களில் அரை அங்குல விட்டம் அளவிற்கு பல புள்ளிகள் காணப்படும். பழுத்த பழங்களின் கழுத்துப் பகுதியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமாகின்றன. இந்நோயானது செடிப்பேன் மூலம் பரவும்.

மேலாண்மை

பாதிக்கப்பட்ட செடிகளை நீக்கி அழித்து விட வேண்டும். தக்காளி விதைப்பதற்கு முன் விளை நிலங்களை சுற்றி சோளம், மக்காச்சோளம், கம்புப்பயிர் போன்றவற்றை 5-6 வரிசைகள் நடவு செய்யலாம். இமிடாகுளோபிரிட் 0.5 சதவீதம் அல்லது ஊடுருவும் பூச்சிக் கொல்லிகளை தெளித்து நோய் பரப்பும் காரணிகளை கட்டுப்படுத்தலாம். வயலை களையின்றி பராமரிக்க வேண்டும்.

மருந்து கரைசல் பயிரில்

நன்கு படிவதற்காக சாண்டோவிட், இன்ட்ரான், ஸ்டிக்கால் என்று பல்வேறு வணிகப் பெயர்களில் கிடைக்கும் திரவ சோப்புகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்து கலக்கி கொண்டு பயன்படுத்த வேண்டும்.

- முனைவர் ரா.விமலா

தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம்,

ஸ்ரீவில்லிப்புத்துார்.







      Dinamalar
      Follow us