sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நெற்பயிரில் நீர் மேலாண்மை

/

நெற்பயிரில் நீர் மேலாண்மை

நெற்பயிரில் நீர் மேலாண்மை

நெற்பயிரில் நீர் மேலாண்மை


PUBLISHED ON : செப் 12, 2018

Google News

PUBLISHED ON : செப் 12, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தின் நெல் பயிரிடப்படும் பரப்பளவில் 80 சதவீதம் வாய்க்கால், கிணறு, ஏரிப்பாசனம் மூலமாகவே நடக்கிறது. மொத்த நீர் வளத்தில் 75 சதவீதம் நெல் பயிருக்கு உபயோகமாகிறது. எனினும் நெல் நாற்றங்காலில் இருந்து அறுவடை வரை நெல்லின் வெவ்வேறு வளர்ச்சி பருவங்களுக்கு தேவையான தண்ணீரின் அளவை தெரிந்து முறையாக பாசனம் செய்தால், நெல் விளைச்சலை பெருக்குவதுடன் 15 முதல் 20 சதவீதம் வரை தண்ணீரை சேமிக்கலாம்.

நீர் மறைய; நீர் பாய்ச்சல்

திருந்திய நெல் சாகுபடி முறையில் மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைத்தால் ஒரு ஏக்கருக்கு ஒரு சென்ட் நாற்றுமேடையே போதுமானது. இம்முறையில் 14 நாட்களிலேயே நாற்றுகள் நடவுக்கு தயாராகிவிடும்.குறைந்த நாட்களே நாற்றங்காலில் இருப்பதால் தண்ணீரின் தேவை குறைகிறது. அடுத்ததாக நடவு வயலை நன்றாக சமப்படுத்தி 2.5 செ.மீ., உயரத்துக்கு மட்டுமே நீரை கட்டி, காய்ந்த பின் லேசான கீறல் வெடிப்புகள் தோன்றியவுடன் மறுபடியும் 2.5 செ.மீ., உயரத்திற்கு நீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறாக அதிக தண்ணீரை வயலில் நிறுத்தாமல் நீர் மறைய, நீர் பாய்ச்சும் முறையால் தண்ணீரின் தேவை குறைகிறது.

வழக்கமாக விவசாயிகள் கடைபிடித்து வரும் நாற்றங்கால் தயாரிப்பு முறையில் ஒரு எக்டருக்கு தேவையான நாற்றுகளை உற்பத்தி செய்வதற்கும், நடவு வயல் தயார் செய்வதற்கும் மற்றும் நாற்று நட்ட நாளில் இருந்து அறுவடை வரைக்கும் மொத்தமாக 1,240 மி.மீ., நீர் தேவைப்படும். ஆனால், திருந்திய நெல் சாகுபடி முறையில் பாய் நாற்றாங்கால் தயாரிப்பதற்கும், நடவு வயலில் நீர் மறைய நீர் கட்டும் நீர் சிக்கன முறையால் 300 முதல் 400 மி.மீ., தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

விவசாயிகள் நீர் மேலாண்மை முறையை கற்று கொண்டு குறைந்த நீர் வளத்தில் அதிக மகசூல் பெற வேண்டும்.

- த.விவேகானந்தன்

துணை இயக்குனர்

நீர் மேலாண்மை பயிற்சி நிலையம் மதுரை.







      Dinamalar
      Follow us