ADDED : ஆக 26, 2026 11:26 PM
பெங்களூரு: கே.பி.எஸ்.சி., அலுவலகத்தின் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் தரவுகள் அழிக்கப்பட்டதை, சி.ஐ.டி., சோதனையில் தெரிய வந்துள்ளது.
கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய கால்நடை மருத்துவ அதிகாரி தேர்வில் முறைகேடு நடந்தது பற்றி, சி.ஐ.டி., விசாரணை நடக்கிறது. நேற்று முன்தினம் கே.பி.எஸ்.சி., தலைமை அலுவலகத்தில், சி.ஐ.டி., 2வது முறையாக சோதனை நடத்தியது.
இந்த சோதனையின் போது வினாத்தாள் வைக்கப்பட்டு இருக்கும் பாதுகாப்பு அறையின் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் தரவுகள் சரியாக சேகரிக்கப்படாததும், முக்கிய தேதிகளில் பதிவான தரவுகள் அழிக்கப்பட்டதும் தெரிந்தது.
இது தவிர ஓ.எம்.ஆர்., எனும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பிரத்யேக அச்சு தாள்களை 'ஸ்கேன்' செ ய்த தரவுகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதும் தெரியவந்தது. இது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
