sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

பெங்களூரில் மீன் விலை 'கிடுகிடு' அசைவ பிரியர்கள் அதிர்ச்சி

/

பெங்களூரில் மீன் விலை 'கிடுகிடு' அசைவ பிரியர்கள் அதிர்ச்சி

பெங்களூரில் மீன் விலை 'கிடுகிடு' அசைவ பிரியர்கள் அதிர்ச்சி

பெங்களூரில் மீன் விலை 'கிடுகிடு' அசைவ பிரியர்கள் அதிர்ச்சி


ADDED : மார் 14, 2025 06:35 AM

Google News

ADDED : மார் 14, 2025 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், பறவை காய்ச்சல் பரவியுள்ளது. ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்தன. நோய் பீதியால் கோழிகள் கொல்லப்படுகின்றன. அசைவ பிரியர்கள் ஆட்டு இறைச்சிக்கு மாறியுள்ளனர்.

ஆட்டு இறைச்சி பிடிக்காதவர்கள், மீனை தேடி சாப்பிடுகின்றனர். மீன் தேவை அதிகரித்துள்ளது. கர்நாடகாவின் கடலோர மாவட்டங்கள், தமிழகம், கேரளா உட்பட, பல்வேறு பகுதிகளில் இருந்து, பெங்களூருக்கு மீன்கள் வரும்.

கோடை காலம் என்பதால், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, கடலில் வெப்பம் இருப்பதால், மீன்கள் மேலே வருவது இல்லை. இதனால் கடலில் மீன்கள் கிடைப்பது இல்லை.டீசல் செலவுக்குக் கூட மீன்கள் கிடைப்பது இல்லை.

துறைமுகங்களில் ஆயிரக்கணக்கான படகுகள் கரையில் நின்றுள்ளன. தேவைக்கு தகுந்தபடி வரத்து இல்லாததால், யஷ்வந்த்பூர், சிவாஜி நகரின் ரசல் மார்க்கெட், கே.ஆர்.மார்க்கெட், கே.ஆர்.புரம் என, பல பகுதிகளுக்கு மீன்கள் வருவது குறைந்துள்ளது.

பெங்களூரில் மீன்கள் விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us