sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

10, பி.யு.சி., பொது தேர்வுகள் 'வெப் காஸ்டிங்' கண்காணிப்பு

/

10, பி.யு.சி., பொது தேர்வுகள் 'வெப் காஸ்டிங்' கண்காணிப்பு

10, பி.யு.சி., பொது தேர்வுகள் 'வெப் காஸ்டிங்' கண்காணிப்பு

10, பி.யு.சி., பொது தேர்வுகள் 'வெப் காஸ்டிங்' கண்காணிப்பு


ADDED : பிப் 21, 2025 05:39 AM

Google News

ADDED : பிப் 21, 2025 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''மார்ச் 1ம் தேதி முதல் 2ம் ஆண்டு பி.யு.சி., தேர்வுகளும், மார்ச் 21 முதல் நடக்கும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளும் வெப் காஸ்டிங் முறையில் கண்காணிக்கப்படும். சலுகை மதிப்பெண் வழங்கப்படாது,'' என கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மாநிலம் முழுதும் மார்ச் 1ம் தேதி முதல் இரண்டாம் ஆண்டு பி.யு.சி., தேர்வு துவங்குகிறது. 5,050 தேர்வு மையங்களில் நடக்கும் தேர்வில், இதில், 7 லட்சத்து 13 ஆயிரத்து 862 மாணவ - மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இதில், 6,61,474 பேர் புதிதாகவும்; 34,071 பேர் மறு தேர்வும், 18,317 பேர் தனியாகவும் தேர்வு எழுதுகின்றனர்.

இதுபோன்று மார்ச் 21ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு துவங்குகிறது. 15,881 பள்ளிகளில் தேர்வுகள் நடக்கின்றன. மொத்தம் 8,96,447 மாணவ - மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இதில், 8,42,817 பேர் புதிய மாணவர்கள். 38,091 பேர் மறு தேர்வும், 15,539 பேர் தனியாகவும் தேர்வு எழுதுகின்றனர். முன்னர் அறிவித்தபடி, தேர்வு மையங்கள் 'வெப்காஸ்டிங்' மூலம் கண்காணிக்கப்படும். யாருக்கும் சலுகை மதிப்பெண் வழங்கப்படாது.

இவ்வாறு அவர் கூறினர்.






      Dinamalar
      Follow us