sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ஆற்றில் மூழ்கி 2 யானைகள் பலி

/

ஆற்றில் மூழ்கி 2 யானைகள் பலி

ஆற்றில் மூழ்கி 2 யானைகள் பலி

ஆற்றில் மூழ்கி 2 யானைகள் பலி


ADDED : நவ 10, 2025 04:21 AM

Google News

ADDED : நவ 10, 2025 04:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராம்நகர்: கனகபுராவின், அர்க்காவதி ஆற்றில் உணவு தேடி வந்த இரண்டு காட்டு யானைகள், நீரில் மூழ்கி உயிரிழந்தன.

பெங்களூரு தெற்கு மாவட்டம், கனகபுரா தாலுகாவின் சாத்தனுார் வன மண்டலத்தின், குன்னுாரில் உள்ள அர்க்காவதி ஆற்று பகுதியில், நேற்று முன் தினம் இரவு, இரண்டு காட்டு யானைகள் உணவு தேடி வந்தன. ஆற்றை கடப்பதற்காக நீரில் இறங்கின.

நீரில் ஏராளமான களைகள் வளர்ந்திருந்தன. இந்த கொடிகள் யானைகளின் கால்களில் சிக்கிக்கொண்டன. முன்னோக்கி செல்ல முடியவில்லை. பின்னுக்கும் நகர முடியவில்லை. நீரில் இருந்து வெளியே வர முடியாமல், மூழ்கி உயிரிழந்தன.

நேற்று காலை அப்பகுதியினர், நீருக்குள் இருந்த யானைகளை கண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர், யானைகளை காப்பாற்ற முற்பட்ட போது, இறந்துவிட்டது தெரிந்தது. இவற்றின் உடல்களை வெளியே கொண்டு வரும் பணி நடக்கிறது.

ஒரே நேரத்தில் இரண்டு யானைகள் இறந்ததால், விலங்கு ஆர்வலர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us