sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

யானைகளுக்கு 2வது கட்ட பயிற்சி

/

யானைகளுக்கு 2வது கட்ட பயிற்சி

யானைகளுக்கு 2வது கட்ட பயிற்சி

யானைகளுக்கு 2வது கட்ட பயிற்சி


ADDED : செப் 20, 2025 05:02 AM

Google News

ADDED : செப் 20, 2025 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: ஜம்பு சவாரி ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் யானைகள், பீரங்கி குண்டு சத்தம் கேட்டு மிரளாமல் இருக்க, இரண்டாவது கட்ட பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது.

மைசூரு தசராவின் ஜம்பு சவாரி ஊர்வலம், அடுத்த மாதம் 2ம் தேதி நடக்கிறது. சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை அபிமன்யு யானை சுமந்து வர, அதை பின்தொடர்ந்து 13 யானைகள் செல்லும்.

ஜம்பு சவாரியை மைசூரு அரண்மனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் நின்று, முதல்வர் சித்தராமையா துவக்கி வைப்பார்.

சாமுண்டீஸ்வரி சிலை மீது மலர் துாவியதும், பீரங்கிகள் மூலம் 21 குண்டுகள் முழங்கப்படும். பின், ஜம்பு சவாரி ஊர்வலம் துவங்கும்.

பீரங்கி குண்டு சத்தம் கேட்டு, யானைகள் மிரளாமல் இருக்க, யானைகள், குதிரைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம்.

கடந்த வாரம் முதற்கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று இரண்டாவது கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. பீரங்கி குண்டுகள் முழங்கியபோது யானைகளும், குதிரைகளும் எந்த அசைவும் இன்றி கம்பீரமாக நின்றன.

அடுத்த வாரம் 3வது கட்டமாக பீரங்கி குண்டுகளை வெடித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us