/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஐ.பி.எல்., டிக்கெட் விற்ற 4 பேர் கைது
/
ஐ.பி.எல்., டிக்கெட் விற்ற 4 பேர் கைது
ADDED : மே 04, 2025 12:24 AM

பெங்களூரு: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்ற, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையிலான, ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டிக்கான டிக்கெட்டை சிலர், கள்ளச்சந்தையில் விற்பதாக சி.சி.பி., போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். யஷ்வந்த்பூர் பகுதியில் டிக்கெட் விற்ற சரண் ராஜ், மில்லர்ஸ் சாலையில் டிக்கெட் விற்ற ஹர்ஷவர்தன், வினய், வெங்கடசாமி ஆகிய 4 பேரை சி.சி.பி., போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் நான்கு பேரும் 1,200 ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டுகளை 10,000 முதல் 12,000 ரூபாய் வரை விற்றது தெரிந்தது. இவர்களிடம் இருந்து 12 ஐ.பி.எல்., டிக்கெட்டுகள், நான்கு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

