ADDED : அக் 23, 2025 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கபல்லாபூர்: சிக்கபல்லாபூர் மாவட்டம், சிந்தாமணி தாலுகாவின், புருடுகுன்டே அருகில் நேற்று மாலை ஒரு பைக் சென்று கொண்டிருந்தது. இதில், ஐந்து பேர் பயணித்தனர்.
அப்போது எதிரே வந்த, தனியார் பள்ளி பஸ், பைக் மீது மோதியது. பைக்கில் இருந்த பாலாஜி, 34, வெங்கடேஷப்பா, 50, ஹரிஷ், 12, ஆர்யா, 3, ஆகியோர் உயிரிழந்தனர்.
மற்றொரு குழந்தை காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறது. பள்ளி பஸ்சில் இருந்த சிறார்களுக்கு, எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

