sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

கைதி தற்கொலையில் 4 போலீசார் 'சஸ்பெண்ட்'

/

கைதி தற்கொலையில் 4 போலீசார் 'சஸ்பெண்ட்'

கைதி தற்கொலையில் 4 போலீசார் 'சஸ்பெண்ட்'

கைதி தற்கொலையில் 4 போலீசார் 'சஸ்பெண்ட்'


ADDED : ஆக 24, 2025 11:06 PM

Google News

ADDED : ஆக 24, 2025 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னப்பட்டணா: போலீஸ் நிலையத்தில் கைதி தற்கொலை செய்த வழக்கில், பணியில் அலட்சியமாக இருந்ததாக, ஏ.எஸ்.ஐ., உட்பட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு தெற்கு சென்னப்பட்டணா பொம்மநாயக்கனஹள்ளி கிராமத்தில் உள்ள ஹொன்னரதி கோவிலில் நடந்த திருட்டில், கெஸ்துார் கிராமத்தின் ரமேஷ், 45, அவரது மகன் மஞ்சு, 22, அனில், 30, ஆகியோரை, கடந்த 18ம் தேதி எம்.கே.தொட்டி போலீசார் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு தங்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

கடந்த 20ம் தேதி போலீஸ் நிலைய கழிப்பறையில் ரமேஷ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விசாரணை என்ற பெயரில் ரமேஷை அடித்து கொன்று, உடலை துாக்கில் தொங்க விட்டதாக போலீசார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ரமேஷ் தற்கொலை செய்த போது, பணியில் இருந்த ஏ.எஸ்.ஐ., நாகராஜ், கான்ஸ்டபிள்கள் பிரதாப், லட்சுமி நாராயணா, சோம்நாத் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, எஸ்.பி., சீனிவாஸ் கவுடா நேற்று உத்தரவிட்டார்.

பணியில் அலட்சியமாக செயல்பட்டதால், நான்கு பேர் மீதும் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us