sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 கடன் தொல்லையால் விரக்தி மின்கோபுரம் மீது ஏறிய நபரால் பரபரப்பு

/

 கடன் தொல்லையால் விரக்தி மின்கோபுரம் மீது ஏறிய நபரால் பரபரப்பு

 கடன் தொல்லையால் விரக்தி மின்கோபுரம் மீது ஏறிய நபரால் பரபரப்பு

 கடன் தொல்லையால் விரக்தி மின்கோபுரம் மீது ஏறிய நபரால் பரபரப்பு


ADDED : பிப் 27, 2026 05:31 AM

Google News

ADDED : பிப் 27, 2026 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துமகூரு: லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி, அதை அடைக்க முடியாமல் திணறும் நபர், உயரமான மின் கோபுரம் மீது ஏறி அமர்ந்ததால், சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை உருவானது.

துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகா பிகேஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் கோபால், 40. இவர் குடும்ப தேவைக்காக பல இடங்களில், லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கினார். கடன் சுமை அதிகரித்தது. கடன்காரர்கள் நெருக்கடி கொடுத்தனர். அடைக்க வழி தெரியாமல் திணறினார்.

வெறுப்படைந்த கோபால், நேற்று காலை பிகேஹள்ளி - தளவேஹள்ளி சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள, 120 அடி உயரமுள்ள ஹை டென்ஷன் மின் கோபுரம் மீது ஏறி அமர்ந்து கொண்டார். இதை கண்ட கிராமத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த திருமணி போலீசார், கோபாலை சமாதானம் செய்த, கீழே இறங்க வைக்க முயற்சித்தனர்.

பல மணி நேரம் பேசிய பின், சமாதானம் அடைந்தார். ஆனாலும், அவரால் கீழே இறங்க முடியவில்லை. அதன்பின் தீயணைப்பு படையினரை வரவழைத்தனர். ஏணி, கயிறு, ஹார்னஸ் பெல்ட் போன்ற சாதனங்களை பயன்படுத்தி, அவரை பாதுகாப்பாக கீழே அழைத்து வந்தனர்.






      Dinamalar
      Follow us