sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 அசிம் பிரேம்ஜி பல்கலையில் ஏ.பி.வி.பி., திடீர் போராட்டம்

/

 அசிம் பிரேம்ஜி பல்கலையில் ஏ.பி.வி.பி., திடீர் போராட்டம்

 அசிம் பிரேம்ஜி பல்கலையில் ஏ.பி.வி.பி., திடீர் போராட்டம்

 அசிம் பிரேம்ஜி பல்கலையில் ஏ.பி.வி.பி., திடீர் போராட்டம்


ADDED : பிப் 25, 2026 05:43 AM

Google News

ADDED : பிப் 25, 2026 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சர்ஜாபூர்: தேசவிரோத செயல்களுக்கு ஆதரவு வழங்குவதாக கூறி, அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து, ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தினர். கல்லுாரியின் பெயர் பலகை மீது கருப்பு மை பூசினர்.

பெங்களூரு ரூரல் சர்ஜாபூரில் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் நாளை, நாளை மறுநாள், 28ம் தேதிகளில், 'ஸ்பார்க்' என்ற அமைப்பின் மூலம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சியின் போது நாடக மேடைகளில் ராணுவ வீரர்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களாகவும், வன்முறையாளர்களாகவும் சித்திரிக்கும் வகையிலும், காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்பதை வெளிப்படுத்தவும் திட்டமிட்டு இருந்ததாக, ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது.

நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த அவர்கள், பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் என்று எழுதப்பட்டு இருக்கும் பலகை மீது, கருப்பு மை பூசினர்.

இந்த நேரத்தில் ஒரு மாணவர் அமைப்பினர், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பின் 15 பேரை கைது செய்து அழைத்து சென்றனர்.

இந்நிலையில் தேச விரோத செயல்களை ஆதரிக்கும், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பு கடிதம் எழுதி உள்ளது.






      Dinamalar
      Follow us