/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடிகை ஆஷிகா ரங்கநாத்தின் மாமா மகள் தற்கொலை; காதலரின் பாலியல் தொல்லையால் விபரீத முடிவு
/
நடிகை ஆஷிகா ரங்கநாத்தின் மாமா மகள் தற்கொலை; காதலரின் பாலியல் தொல்லையால் விபரீத முடிவு
நடிகை ஆஷிகா ரங்கநாத்தின் மாமா மகள் தற்கொலை; காதலரின் பாலியல் தொல்லையால் விபரீத முடிவு
நடிகை ஆஷிகா ரங்கநாத்தின் மாமா மகள் தற்கொலை; காதலரின் பாலியல் தொல்லையால் விபரீத முடிவு
ADDED : டிச 01, 2025 06:28 AM

புட்டேனஹள்ளி: நடிகை ஆஷிகா ரங்கநாத்தின் மாமா மகள், தன் காதலரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல், தற்கொலை செய்து கொண்டார்.
ஹாசனை சேர்ந்தவர் அச்சலா, 22. இவர் பிரபல நடிகை ஆஷிகா ரங்கநாத்தின் மாமா மகளாவார். பொறியியல் பட்டதாரியான அச்சலா, தனியார் நிறுவனங்களில் வேலை தேடி வந்தார். இவருக்கு மயாங்க், 25, என்பவர் துாரத்து உறவினர். இருவருக்கும் ஏற்பட்ட நட்பு, நாளடைவில் காதலாக மாறியது.
தாக்குதல் இவர்களின் திருமணத்துக்கு அச்சலாவின் பெற்றோரும் சம்மதித்தனர். காதலர்கள் சேர்ந்து ஊர் சுற்றினர். திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த மயாங்க், தன்னுடன் உடல் ரீதியான தொடர்பு வைத்து கொள்ளும்படி, அச்சலாவை பலவந்தப்படுத்தினார். ஆனால் அவர் சம்மதிக்கவில்லை. இதனால் இவரை மயாங்க் தாக்கியதுடன், தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளார்.
இதற்கிடையே, மயாங்க் போதைப் பழக்கத்துக்கு அடிமை என்பதும், பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதும் அச்சலாவுக்கு தெரிந்தது. காதலரின் தொந்தரவு அதிகரித்ததாலும், அவரது துரோகத்தை தாங்க முடியாமலும் மனம் நொந்த அச்சலா, ஹாசனில் இருக்க பிடிக்காமல், பெங்களூருக்கு வந்தார்.
புட்டேனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பாண்டுரங்கா நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, வேலை தேடி வந்தார். காதலர் நடத்தை சரியில்லாதவராக இருந்தும், அவரை அச்சலாவால் மறக்க முடியவில்லை.
சமீபத்தில், தன் பிறந்த நாளை கொண்டாடினார். இந்நிலையில் அவரை தேடி பெங்களூருக்கு வந்த மயாங்க், பாலியல் தொல்லை கொடுக்க துவங்கினார். இதனால், மன அழுத்தத்துக்கு ஆளான அச்சலா, நவம்பர் 22ல் உறவினர் வீட்டில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன், மயாங்க்குக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், 'வாழ்க்கையில் உன்னை விட்டு விட்டு, இருக்க முடியாது. நீ எனக்கு துரோகம் செய்திருந்தாலும், உன்னை மறக்க முடியவில்லை. என் கனவுகளை நீ சிதைத்து சுக்கு நுாறாக்கி விட்டாய்.
எனக்கு நீ துரோகம் செய்யவில்லை என, ராகவேந்திர சுவாமி மீது சத்தியம் செய். நீ எனக்கு செய்த தீமைகளுக்கு, நீ பதில் சொல்லியே ஆக வேண்டும். என் நம்பரை பிளாக் செய்ய வேண்டாம்' என, வேண்டுகோள் விடுத்துள்ளார். 'மகள் தற்கொலைக்கு மயாங்கும், அவரது தாய் மைனாவும் காரணம். அவர்களை கைது செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, புட்டேனஹள்ளி போலீஸ் நிலையத்தில், அச்சலாவின் பெற்றோர் புகார் அளித்தனர்.
ஒரு வாரம் ஆனால் புகார் அளித்து ஒரு வாரத்துக்கு மேலாகியும், இதுவரை மயாங்க் மற்றும் அவரது தாய் மைனாவை கைது செய்யவில்லை என, கூறப்படுகிறது.
எனவே ஹாசன் நகர் போலீஸ் நிலையத்தில், நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளனர். போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

