/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிவகுமாரை பா.ஜ.,வுக்கு இழுக்க முயற்சி பசனகவுடா பாட்டீல் எத்னால் 'திடுக்'
/
சிவகுமாரை பா.ஜ.,வுக்கு இழுக்க முயற்சி பசனகவுடா பாட்டீல் எத்னால் 'திடுக்'
சிவகுமாரை பா.ஜ.,வுக்கு இழுக்க முயற்சி பசனகவுடா பாட்டீல் எத்னால் 'திடுக்'
சிவகுமாரை பா.ஜ.,வுக்கு இழுக்க முயற்சி பசனகவுடா பாட்டீல் எத்னால் 'திடுக்'
ADDED : டிச 13, 2025 06:56 AM

பெலகாவி: ''என்னை கட்சியில் இருந்து நீக்கிய போது, துணை முதல்வர் சிவகுமாரை பா.ஜ.,வுக்கு இழுக்க டில்லியிலேயே முயற்சி நடந்தது,'' என விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தெரிவித்தார். இது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
என்னை கட்சியில் இருந்து நீக்கிய போது, சிவகுமாரை பா.ஜ.,வுக்கு இழுக்க முயற்சி நடந்தது. இதற்காக டில்லியிலேயே திட்டமிட்டனர்.
நான் பா.ஜ.,வில் இருந்தால், அவரை கட்சிக்கு அழைத்து வர முடியாது என்பதால், என்னை நீக்கிய பின் முயற்சித்தனர்.
விஜயேந்திரா, தான் துணை முதல்வராகும் விருப்பத்தில், டில்லியில் சிவகுமாரை சந்தித்து பேச்சு நடத்தினார். இவரை அமித் ஷாவிடம் அழைத்து சென்றனர். ஆனால் அவர், இந்த கோரிக்கையை நிராகரித்தார்.
இந்த விஷயத்தை பா.ஜ.,வினரே, என்னிடம் கூறினர். அதன்பின் அமித் ஷா உத்தரவுபடி, தங்களின் எண்ணத்தை கை விட்டதாக, பிரஹலாத் ஜோஷி கூறினார். ஆனால், சிவ குமாரை பா.ஜ.,வுக்கு அழைத்து வர, முயற்சி நடந்தது உண்மை.
டிசம்பர் 19ல், காங்கிரசார் டில்லிக்கு செல்ல உள்ளனர். இப்போது பெலகாவியில் டின்னர் மீட்டிங், கோஷ்டி ஆலோசனை கூட்டங்கள் நடந்துள்ளன. எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெறுவதற்காக, தனித்தனி ஆலோசனை கூட்டங்கள் நடக்கின்றன.
எதிர்க்கட்சி தலைவர் அசோக்கின் அறையில், பா.ஜ.,வின் சில எம்.எல்.ஏ.,க்கள் என்னை சந்தித்தனர். 'உங்களை போன்ற தலைவர்கள், பா.ஜ.,வுக்கு அவசியம். கட்சிக்கு வாருங்கள்' என அழைத்தனர்.
நான் கட்சிக்கு திரும்பினால், எம்.எல்.ஏ.,வாக மட்டுமே திரும்ப மாட்டேன். பெரிய பதவிகளான மாநில தலைவர் அல்லது எதிர்க்கட்சி தலைவர் பதவி கொடுத்தால், பா.ஜ.,வுக்கு வருவேன் என, கூறியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

