sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பெங்களூரு சிறை கைதிகளின் 'பீடி' போராட்டம் வாபஸ்

/

 பெங்களூரு சிறை கைதிகளின் 'பீடி' போராட்டம் வாபஸ்

 பெங்களூரு சிறை கைதிகளின் 'பீடி' போராட்டம் வாபஸ்

 பெங்களூரு சிறை கைதிகளின் 'பீடி' போராட்டம் வாபஸ்


ADDED : டிச 04, 2025 05:46 AM

Google News

ADDED : டிச 04, 2025 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் பீடி, சிகரெட் விற்பனைக்கு அனுமதிக்க கோரி, நான்கு நாட்கள் போராட்டம் நடத்தி வந்த கைதிகள், அதிகாரிகளின் எச்சரிக்கையை அடுத்து, வாபஸ் பெற்றனர்.

பெங்களூரில் கைதிகள் மொபைல் போன், மதுபானம், புகையிலை பயன்படுத்தும் வீடியோக்கள் பரவியதால், மாநில அரசு சிறை துறை மீது அதிருப்தி அடைந்தது.

இதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா புதிய தலைமை சிறை கண்காணிப்பாளராக ஐ.பி.எஸ்., அதிகாரி அன்ஷு குமார் நியமிக்கப்பட்டார். இவர், சிறையில் தொடர்ந்து சோதனை நடத்தி வருவதால், முறைகேடுகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் மொபைல் போன், பீடி, சிகரெட் பயன்படுத்த முடியாமல் கோபத்தில் இருந்த கைதிகள், நான்கு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகளோ, சிறை விதிகள்படி, சிறையில் பீடி, சிகரெட் விற்க முடியாது என்று கூறியும், கைதிகள் கேட்கவில்லை. தலைமை சிறை கண்காணிப்பாளராக ஐ.பி.எஸ்., அதிகாரி அன்ஷு குமார் பேசியும் கைதிகள் கேட்கவில்லை.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த பின், நேற்று முன்தினம் இரவு கைதிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.






      Dinamalar
      Follow us