/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தொடரும்: எத்னால் நம்பிக்கை
/
பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தொடரும்: எத்னால் நம்பிக்கை
பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தொடரும்: எத்னால் நம்பிக்கை
பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தொடரும்: எத்னால் நம்பிக்கை
ADDED : பிப் 24, 2026 06:30 AM
விஜயபுரா: ''நான் எந்த சூழ்நிலையிலும், ம.ஜ.த.,வில் இணையமாட்டேன். பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி நீடிக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது,'' என, எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறினார்.
இதுகுறித்து, விஜயபுராவில் நேற்று அளித்த பேட்டி:
நான் ம.ஜ.த.,வில் சேருவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை. எந்த காரணத்தை முன்னிட்டும், நான் அக்கட்சிக்கு செல்லமாட்டேன். மாறாக பா.ஜ.,வை பலப்படுத்துவது மட்டுமே, என் குறிக்கோளாகும். நான் மட்டுமல்ல, ரமேஷ் ஜார்கிஹோளியும் ம.ஜ.த.,வுக்கு செல்லமாட்டார்.
கர்நாடக அரசியலில், பா.ஜ., மற்றும் ம.ஜ.த., கூட்டணி தொடரும் என, நான் நம்பகிறேன். தேவகவுடா, குமாரசாமியின் செல்வாக்கால், துமகூரில் பா.ஜ.,வால் வெற்றி பெற முடிந்தது.
மைசூரு, கோலார், பெங்களூரு ரூரல், சித்ரதுர்கா தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. இதற்கு தேவகவுடா, குமாரசாமியின் நேரடி ஆதரவே காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.

