sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

/

 பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

 பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

 பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்


ADDED : மார் 03, 2026 06:21 AM

Google News

ADDED : மார் 03, 2026 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோரமங்களா: பெங்களூரு கோரமங்களா மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு, மின்னஞ்சலில் தமிழில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு கோரமங்களாவில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்த அலுவலகத்திற்கு நேற்று காலை மின்னஞ்சல் ஒன்று வந்தது. தமிழில் எழுதப்பட்டி ருந்த மின்னஞ்சலில், 'பயங்கரவாதி கசாப்பை துாக்கிலிட்ட உங்களை மன்னித்து விடமாட்டோம். உங்கள் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. சிறிது நேரத்தில் வெடித்து விடும்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதிர்ச்சி அடைந்த அதி காரிகள், உடனடியாக கோரமங்களா போலீசாருக்கும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கும், மோப்ப நாய் குழுவினருக்கும் தகவல் தெ ரிவித்தனர்.

உடனடியாக வந்த அவர்கள், அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், பொது மக்களை வெளியேற்றினர். அலுவலகத்திலும், அலுவலகம் அமைந்துள்ள கட்டடம் மற்றும் வளாகத்திலும் பல மணி நேரம் சோதனை நடத்தினர். சோதனையில் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் எதுவும் கண்டறியப்படாததால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மீண்டும் பாஸ்போர்ட் அலுவலக பணிகள் துவங்கின. மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பிய நபர் குறித்தும், அதன், 'ஐ.பி.,' முகவரி குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us