sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

காவிரியில் வெள்ளம்: தப்பிய தந்தை, மகன்

/

காவிரியில் வெள்ளம்: தப்பிய தந்தை, மகன்

காவிரியில் வெள்ளம்: தப்பிய தந்தை, மகன்

காவிரியில் வெள்ளம்: தப்பிய தந்தை, மகன்


ADDED : ஜூன் 26, 2025 12:56 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு : மாடு மேய்க்க சென்றபோது, காவிரி ஆற்றின் வெள்ளத்தில் சிக்கிய தந்தை, மகன் மரத்தில் ஏறி உயிர் தப்பினர்.

மைசூரு மாவட்டம், டி.நரசிபுரா தாலுகாவின், மாகனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் கிருஷ்ண கவுடா, 50. இவரது மகன் பிரவீன், 25. தந்தையும், மகனும் நேற்று முன்தினம் காலை, மாடுகளை மேய்க்க கிராமத்தின் அருகில் உள்ள காவிரி ஆற்றங்கரைக்கு வந்தனர். மாடுகளை அங்கு மேய்ச்சலுக்கு விட்டனர்.

நீர் குறைவாக இருந்ததால், தந்தையும், மகனும் ஆற்றை கடந்து மற்றொரு கரையில் உள்ள தேவி தோப்புக்கு சென்று ஓய்வெடுத்தனர். மாலை வீடு திரும்ப தயாரானபோது, ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்திருந்தது. அவர்களால் கடக்க முடியவில்லை. தோப்பிலும் வெள்ளம் சூழ்ந்ததால், அங்கிருந்த மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டனர்.

மாடு மேய்க்க சென்றவர்கள் இரவாகியும் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் தேட துவங்கினர். கண்டுபிடிக்க முடியாததால், பன்னுார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் நேற்று காலை ஆற்றங்கரைக்கு வந்து தேடியபோது, தந்தையும், மகனும் மரத்தின் மீது அமர்ந்திருப்பது தெரிந்தது.

பரிசல் ஓட்டும் உமேஷ் என்பவரை வரவழைத்து, பரிசலை அனுப்பி தந்தை, மகனை மரத்தில் இருந்து மீட்டு வீட்டுக்கு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us