sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

பானுவாசர ஸ்பெஷல்

/

 கல்லுாரி பேராசிரியர் + மாணவர்கள் கூட்டணி 60 நாட்கள் தக்காளி கெடாமல் பாதுகாக்கும் மிஷின் கண்டுபிடிப்பு

/

 கல்லுாரி பேராசிரியர் + மாணவர்கள் கூட்டணி 60 நாட்கள் தக்காளி கெடாமல் பாதுகாக்கும் மிஷின் கண்டுபிடிப்பு

 கல்லுாரி பேராசிரியர் + மாணவர்கள் கூட்டணி 60 நாட்கள் தக்காளி கெடாமல் பாதுகாக்கும் மிஷின் கண்டுபிடிப்பு

 கல்லுாரி பேராசிரியர் + மாணவர்கள் கூட்டணி 60 நாட்கள் தக்காளி கெடாமல் பாதுகாக்கும் மிஷின் கண்டுபிடிப்பு


ADDED : நவ 23, 2025 04:16 AM

Google News

ADDED : நவ 23, 2025 04:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

: தக்காளியை பயிரிட்டு மார்க்கெட்டுக்கு கொண்டு வருவதற்குள் விவசாயிகள் படும் கஷ்டம் சொல்லி தீராது. அப்படியே சந்தைக்கு கொண்டு வந்தாலும், அவற்றை நீண்ட நாட்கள் வைத்து வியாபாரம் செய்ய முடியாது. விரைவில் கெட்டுப் போகிவிடும்.

உரிய விலை கிடைக்காமல், தக்காளியை விவசாயிகள் சாலையில் கொட்டும் வேதனையும் நடக்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் தக்காளியை பதப்படுத்தும் மிஷினை கல்லுாரி பேராசிரியருடன் சேர்ந்து, மாணவர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

பேராசிரியர் தாவணகெரே மாவட்டத்தில் உள்ள பி.ஐ.இ.டி., கல்லுாரியில் உயிரி தொழில்நுட்ப துறை பேராசிரியராக ஸ்ருதி பணியாற்றி வருகிறார். இவர், தன் மாணவர்களுடன் இணைந்து தக்காளி பதப்படுத்தும் மிஷினை கண்டுபிடித்து உள்ளார். இந்த மிஷினில் தக்காளியை 60 நாட்கள் வரை கெட்டு போகாமல் வைத்து பதப்படுத்த முடியும்.

இந்த மிஷினிலிருந்து வெளியாகும் யு.வி., ஒளி, ஒரு வகையான புற ஊதா கதிர்கள் தக்காளியின் மீது பட்டு, அவற்றை புத்துணர்ச்சியுடன் நீண்ட நாட்கள் இருக்க வைக்கிறது. இந்த மிஷின் ஐந்து இரும்பு அடுக்குகளில், எல்.இ.டி., விளக்குகளுடன் சாதாரணமாகவே காட்சி அளிக்கிறது.

இந்த மிஷின், சமீபத்தில் டில்லியில் நடந்த 'ஸ்மார்ட் இந்தியா கிராண்ட் சேலஞ்ச்' என்ற போட்டியில் நான்காவது இடத்தை பிடித்து சாதனை படைத்தது. இந்த மிஷினை பெரிய அளவில் கொண்டு செல்ல மத்திய அரசும் திட்டமிட்டுள்ளது.

இந்த மிஷின் நடைமுறைக்கு வந்தால் தக்காளி 60 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். இது விவசாயிகளுக்கு கை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மூன்று மாதம் இதுகுறித்து, பேராசிரியை ஸ்ருதி கூறியதாவது:

இந்த மிஷினை தயாரிக்க மூன்று மாதங்கள் ஆகின்றன. இந்த மிஷினை உருவாக்கும் பணியில், உயிரி தொழில்நுட்ப துறையை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

தக்காளியை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் கூட 15 நாட்களில் கெட்டுவிடும்.

இந்த மிஷினில் வைத்தால் இரண்டு மாதங்கள் வரை கெட்டு போகாமல் இருக்கும். விலை வீழ்ச்சி ஏற்படும்போது விவசாயிகளுக்கு நிச்சயம் கைகொடுக்கும். இந்த மிஷின் கண்டுபிடிப்புக்கு கல்லுாரி முதல்வர் அரவிந்த் பெரிதும் உதவினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us