/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
3 அதிகாரி மீது லோக் ஆயுக்தாவில் புகார்
/
3 அதிகாரி மீது லோக் ஆயுக்தாவில் புகார்
ADDED : ஏப் 25, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு: மைசூரு நகரின் ஹைதர் அலி சாலையை அகலப்படுத்துவதற்காக, 40 மரங்களை கடந்த 13ம் தேதி மாநகராட்சி நிர்வாகம் வெட்டியது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஏழு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, வன அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உத்தரவிட்டார்.
இதற்கிடையில், இச்சம்பவத்தில், தொடர்புடைய மாவட்ட துணை வனப்பாதுகாவலர் பசவராஜூ, மாநகராட்சி கமிஷனர் ஷேக் தன்வீர் ஆசிப், நசர்பாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஹாதேவசாமி ஆகிய மூன்று பேர் மீது நேற்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழவின் தலைவி பானு மோகன் லோக் ஆயுக்தாவில் புகார் செய்தார்.

