தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அரசை நடத்த முடியாது காங்., தலைவர் மிரட்டல்

அரசை நடத்த முடியாது காங்., தலைவர் மிரட்டல்

அரசை நடத்த முடியாது காங்., தலைவர் மிரட்டல்


ADDED : ஏப் 16, 2025 07:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2025 07:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாவணகெரே : ''லிங்காயத் மற்றும் ஒக்கலிக சமுதாயத்தினரை பகைத்து கொண்டு, அரசு நடத்த முடியுமா,'' என காங்., மூத்த தலைவரும், அகில இந்திய வீரசைவ மஹாசபா தலைவருமான ஷாமனுார் சிவசங்கரப்பா கேள்வி எழுப்பினார்.

தாவணகெரேவில் நேற்று அவர் அளித்த பேட்டி:

கர்நாடகாவில் லிங்காயத் மற்றும் ஒக்கலிக சமுதாயத்தினரை பகைத்து கொண்டு, அரசு நடத்துவீர்களா. இவ்விரு சமுதாயங்களின் கோபத்துக்கு ஆளானால், ஆட்சி நடத்த முடியாது.

மாநிலத்தில் வீரசைவ லிங்காயத் சமுதாயத்தினர், அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இரண்டாவது இடத்தில் ஒக்கலிக சமுதாயம் உள்ளது. தேவையின்றி ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிடுவதாக கூறுகின்றனர். ஒரு வேளை வெளியிட்டால், ஒக்கலிகர், லிங்காயத் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துவோம். இது பற்றி நாங்கள் ஏற்கனவே, ஆலோசனை நடத்தினோம். எங்களை பகைத்து கொண்டு, எப்படி அரசு நடத்துவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us