sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 ம.ஜ.த., பிரமுகரை கொல்ல முயன்ற காங்கிரஸ் பெண் தொண்டர் கைது

/

 ம.ஜ.த., பிரமுகரை கொல்ல முயன்ற காங்கிரஸ் பெண் தொண்டர் கைது

 ம.ஜ.த., பிரமுகரை கொல்ல முயன்ற காங்கிரஸ் பெண் தொண்டர் கைது

 ம.ஜ.த., பிரமுகரை கொல்ல முயன்ற காங்கிரஸ் பெண் தொண்டர் கைது


ADDED : நவ 23, 2025 04:05 AM

Google News

ADDED : நவ 23, 2025 04:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாவணகெரே: அரசியல் முன்விரோதத்தில் ம.ஜ.த., பிரமுகரை கொல்ல முயன்ற வழக்கில் காங்கிரஸ் பெண் தொண்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாவணகெரே மாவட்டம், மாயகொண்டாவில் கடந்த, 10ம் தேதி திப்பு ஜெயந்தி கொண்டாடப்பட்டது. முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்றனர். இந்நேரத்தில் கூட்டத்திற்குள் புகுந்த ஒருவர், ம.ஜ.த., பிரமுகர் அஸ்கர், 45, என்பவரின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பினார்.

உயிருக்கு போராடிய அஸ்கர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராகி வருகிறது. அஸ்கரின் குடும்பத்தினர் புகார் அளித்ததை அடுத்து, மாயகொண்டா போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் மாயகொண்டாவை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் காலித், 35, கடந்த 17ம் தேதி கைது செய்யப்பட்டார். அரசியல் முன்விரோதம் காரணமாக, மாயகொண்டா காங்கிரஸ் பெண் தொண்டர் சவிதா பாய் மல்லேஷ் கூறியதால், அஸ்கரை கத்தியால் குத்தியதாக காலித் வாக்குமூலம் அளித்தார்.

தலைமறைவாக இருந்த சவிதாபாயை, போலீசார் தேடினர். நேற்று முன்தினம் இரவு தாவணகெரேயின் ஆசாத் நகரில் அவர் கைது செய்யப்பட்டார்.

மாடலான சவிதாபாய், 2023 தேர்தலில் மாயகொண்டா தொகுதியில், காங்கிரஸ் சீட் பெற முயற்சித்தார். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்அவரது தனிப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின.

தேர்தலில் பசவந்தப்பா என்பவருக்கு சீட் கிடைத்தது. அவர் வெற்றி பெற்று, தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ளார். தன் தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டது பசவந்தப்பா தான் என்று, சவிதா பாய் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us