sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ புதிய கட்டடத்தில் தம்பதி மர்ம சாவு

புதிய கட்டடத்தில் தம்பதி மர்ம சாவு

புதிய கட்டடத்தில் தம்பதி மர்ம சாவு


ADDED : ஏப் 18, 2025 07:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2025 07:05 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சஞ்சய்நகர்: புதிதாக கட்டப்படும் கட்டடம் ஒன்றில், தம்பதி சந்தேகத்திற்கிடமாக இறந்து கிடந்தனர். உடல்களை மீட்டு போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

யாத்கிர் நகரை சேர்ந்தவர் மெஹபூப், 45. இவரது மனைவி பர்வீன், 35. தம்பதி ஓராண்டுக்கு முன், பிழைப்பு தேடி பெங்களூரு வந்தனர்.

சஞ்சய் நகரின் டாலர்ஸ் காலனியில் புதிதாக கட்டப்படும் கட்டடத்தில் பணி செய்தனர். மெஹபூப் மேஸ்திரியாகவும், அவரது மனைவி சித்தாளாகவும் பணியாற்றினர்.

இதே கட்டடத்தில் தம்பதி தங்கியிருந்தனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, சமீபத்தில் சொந்த ஊருக்கு சென்று திரும்பினர். சில நாட்களாக கட்டடத்தில் பணிகள் நடக்கவில்லை. தம்பதி இங்கு தங்கியிருந்தனர்.

இதற்கிடையே கட்டடத்தில் இருந்து, துர்நாற்றம் வீசுவதை கவனித்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு வந்த சஞ்சய் நகர் போலீசார், கட்டடத்துக்குள் சென்று சோதனை நடத்திய போது, தம்பதி இறந்து கிடப்பது தெரிந்தது. இவர்கள் மூன்று நாட்களுக்கு முன் இறந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மெஹபூப் தரையில் கிடந்தார்; அவரது உடலில் காயங்கள் தென்பட்டன. பர்வீன் துாக்கிட்ட நிலையில் காணப்பட்டார். ஏதோ காரணத்துக்காக, தம்பதிக்குள் சண்டை நடந்திருக்கலாம்.

இதில் மெஹபூப் காயமடைந்து இறந்திருக்க கூடும். கணவர் இறந்ததை பார்த்து பயத்தில் மனைவி பர்வீன் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.

மேலும், மர்ம கும்பல் திருடும் நோக்கில், கட்டடத்தில் புகுந்து மெஹபூபை தாக்கி கொலை செய்து விட்டு, பர்வீனை துாக்கில் தொங்கவிட்டு தப்பி சென்றிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இருவரின் உடல்களையும் மீட்டு, பரிசோதனைக்கு அனுப்பி விட்டு, விசாரணையை துவக்கி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us