sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

வெயிலால் 8 மாவட்டங்களில் நீதிமன்ற பணி நேரம் மாற்றம்

/

வெயிலால் 8 மாவட்டங்களில் நீதிமன்ற பணி நேரம் மாற்றம்

வெயிலால் 8 மாவட்டங்களில் நீதிமன்ற பணி நேரம் மாற்றம்

வெயிலால் 8 மாவட்டங்களில் நீதிமன்ற பணி நேரம் மாற்றம்


ADDED : ஏப் 08, 2025 05:21 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு; கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் ஜென்ரல் பரத் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கலபுரகி கிளைக்கு உட்பட்ட பல்லாரி, பீதர், கொப்பால், ராய்ச்சூர், கலபுரகி, யாத்கிர் ஆகிய மாவட்டங்கள்; பெலகாவி கிளைக்கு உட்பட்ட விஜயபுரா, பாகல்கோட் ஆகிய மாவட்டங்களில் உள்ள சிவில், கிரிமினல் நீதிமன்றங்கள், குடும்பநல நீதிமன்றங்கள், தொழிலாளர் நீதிமன்றங்களின் பணி நேரம் மாற்றம் செய்யப்படுகிறது.

வரும் மே 31ம் தேதி வரை, தினமும் காலை 7:30 முதல் மதியம் 2:00 மணி வரை நீதிமன்ற அலுவலக பணிகள் நடக்கும்.

இது போல் தினமும் காலை 8:00 முதல் 11:00 மணி வரையிலும்; 11:30 முதல் மதியம் 1:30 மணி வரை நீதிமன்ற விசாரணை நடக்கும். 11:00 முதல் 11:30 மணி வரை இடைவேளை விடப்படும்.

ஏப்., 26 மற்றும் மே 24ம் தேதிகளான நான்காவது சனிக்கிழமைகளில், காலை 7:30 முதல் மதியம் 12:00 மணி வரை நீதிமன்றம் இயங்கும்.






      Dinamalar
      Follow us