/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வெயிலால் 8 மாவட்டங்களில் நீதிமன்ற பணி நேரம் மாற்றம்
/
வெயிலால் 8 மாவட்டங்களில் நீதிமன்ற பணி நேரம் மாற்றம்
வெயிலால் 8 மாவட்டங்களில் நீதிமன்ற பணி நேரம் மாற்றம்
வெயிலால் 8 மாவட்டங்களில் நீதிமன்ற பணி நேரம் மாற்றம்
ADDED : ஏப் 08, 2025 05:21 AM
பெங்களூரு; கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் ஜென்ரல் பரத் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கலபுரகி கிளைக்கு உட்பட்ட பல்லாரி, பீதர், கொப்பால், ராய்ச்சூர், கலபுரகி, யாத்கிர் ஆகிய மாவட்டங்கள்; பெலகாவி கிளைக்கு உட்பட்ட விஜயபுரா, பாகல்கோட் ஆகிய மாவட்டங்களில் உள்ள சிவில், கிரிமினல் நீதிமன்றங்கள், குடும்பநல நீதிமன்றங்கள், தொழிலாளர் நீதிமன்றங்களின் பணி நேரம் மாற்றம் செய்யப்படுகிறது.
வரும் மே 31ம் தேதி வரை, தினமும் காலை 7:30 முதல் மதியம் 2:00 மணி வரை நீதிமன்ற அலுவலக பணிகள் நடக்கும்.
இது போல் தினமும் காலை 8:00 முதல் 11:00 மணி வரையிலும்; 11:30 முதல் மதியம் 1:30 மணி வரை நீதிமன்ற விசாரணை நடக்கும். 11:00 முதல் 11:30 மணி வரை இடைவேளை விடப்படும்.
ஏப்., 26 மற்றும் மே 24ம் தேதிகளான நான்காவது சனிக்கிழமைகளில், காலை 7:30 முதல் மதியம் 12:00 மணி வரை நீதிமன்றம் இயங்கும்.

