sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

கிரைம் கார்னர்

/

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்


ADDED : ஏப் 29, 2025 06:25 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தொழிற் சாலையில் தீ

கோலார் மாவட்டம், மாலுார் தாலுகாவின் தொழிற் பகுதியில் சவுத் பீல்டு பெயின்ட்ஸ் லிமிடெட் என்ற தொழிற்சாலை உள்ளது. நேற்று காலை தொழிற்சாலையில் தீப்பிடித்ததில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், உபகரணங்கள் தீக்கிரையாகின. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர்.

* ரியல் எஸ்டேட் அதிபர் பலி

பெங்களூரின், ராச்சேனஹள்ளியில் வசித்த கிரண்குமார், 36, ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவர் நேற்று அதிகாலை, எலஹங்காவின், பி.பி., சர்வீஸ் சாலையில் ஸ்கூட்டரில் செல்லும் போது, வேகமாக வந்த டெம்போ டிராவலர் மோதியது. இதில் காயமடைந்த அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

* இடி தாக்கி 2 பேர் பலி

விஜயநகரா, ஹகரிபொம்மனஹள்ளியின், தெலகி கிராமத்தில் வசித்த சென்னகிரி ஹாலேஷப்பா, 48, நேற்று மாலை வயலில் ஆடு மேய்தது கொண்டிருந்தார். அப்போது இடியுடன் கூடிய மழை பெய்தது. இடி தாக்கி அவர் உயிரிழந்தார். ராய்ச்சூர், சிரவாராவின், கே.குடதின்னி கிராமத்தின் சாயண்ணா யாதவ், 55, நேற்று முன்தினம் தன் வயலில் இருந்த போது, இடி தாக்கி உயிரிழந்தார்.

* வாகன திருடர்கள் கைது

பெங்களூரின், மஹாதேவபுரா, ஒயிட் பீல்டு உட்பட, பல்வேறு பகுதிகளில் வாகன திருட்டில் ஈடுபட்ட வருண் குமார், 30, முகமது, 30, ஆகியோரை மஹாதேவபுரா போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள் மீட்கப்பட்டன.

* மனைவியை கொன்றவருக்கு 'ஆயுள்'

துமகூரு, பாவகடாவின், வெங்கடாபுரா கிராமத்தில் வசிப்பவர் பாலாஜி, 32. இவர் 2023 மார்ச் 23ம் தேதி, தன் மனைவியை அரிவாளால் வெட்டி கொன்ற வழக்கில் கைதானார். போலீசார் மதுகிரியின் 4வது கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இவரது குற்றம் உறுதியானதால், ஆயுள் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

***






      Dinamalar
      Follow us