sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ஏரியில் சிக்கிய மகள், தந்தை பலி

/

ஏரியில் சிக்கிய மகள், தந்தை பலி

ஏரியில் சிக்கிய மகள், தந்தை பலி

ஏரியில் சிக்கிய மகள், தந்தை பலி


ADDED : ஏப் 27, 2025 04:52 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கபல்லாபூர்: ஏரியில் தவறி விழுந்த மகளை காப்பாற்ற சென்று, தந்தையும் நீரில் மூழ்கி இருவரும் பலியாகினர்.

சிக்கபல்லாபூர் மாவட்டம், சித்லகட்டாவின் ஷெட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நாகேஷ், 45. இவரது மகள் தனுஸ்ரீ, 13. ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை தோட்ட பணிக்கு நாகேஷ் சென்றபோது, தனுஸ்ரீயும் சென்றார். அங்குள்ள ஏரியில் தனுஸ்ரீ, கை, கால்களை கழுவிக் கொண்டிருந்தார்.

அப்போது கால் வழுக்கி, ஏரிக்குள் விழுந்து தத்தளித்தார். இதை பார்த்த அவரது தந்தை நாகேஷ், மகளை காப்பாற்ற ஏரியில் குதித்தார். ஏரியில் சேரும், சகதியும் அதிகமாக இருந்ததால், இருவரின் கால்களும் அதில் சிக்கிக் கொண்டன.

இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த அவ்வழியாக வந்த கிராமத்தினர், இருவரையும் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர், இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சித்லகட்டா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us