தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஏரியில் சிக்கிய மகள், தந்தை பலி

ஏரியில் சிக்கிய மகள், தந்தை பலி

ஏரியில் சிக்கிய மகள், தந்தை பலி


ADDED : ஏப் 27, 2025 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2025 04:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கபல்லாபூர்: ஏரியில் தவறி விழுந்த மகளை காப்பாற்ற சென்று, தந்தையும் நீரில் மூழ்கி இருவரும் பலியாகினர்.

சிக்கபல்லாபூர் மாவட்டம், சித்லகட்டாவின் ஷெட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நாகேஷ், 45. இவரது மகள் தனுஸ்ரீ, 13. ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை தோட்ட பணிக்கு நாகேஷ் சென்றபோது, தனுஸ்ரீயும் சென்றார். அங்குள்ள ஏரியில் தனுஸ்ரீ, கை, கால்களை கழுவிக் கொண்டிருந்தார்.

அப்போது கால் வழுக்கி, ஏரிக்குள் விழுந்து தத்தளித்தார். இதை பார்த்த அவரது தந்தை நாகேஷ், மகளை காப்பாற்ற ஏரியில் குதித்தார். ஏரியில் சேரும், சகதியும் அதிகமாக இருந்ததால், இருவரின் கால்களும் அதில் சிக்கிக் கொண்டன.

இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த அவ்வழியாக வந்த கிராமத்தினர், இருவரையும் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர், இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சித்லகட்டா போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us