ADDED : மார் 14, 2026 06:37 AM

- நமது நிருபர் -: பன்னீர் பயன்படுத்தி குருமா, பாலக் பன்னீர், பிரியாணி உட்பட, பலவிதமான தின்பண்டங்களுக்கு பன்னீர் பயன்படுத்துகின்றனர். சேமியாவில் மட்டுமின்றி, பன்னீரிலும் சுவையான பாயசமும் செய்யலாம். எப்படி செய்வது என, பார்க்கலாம்.
செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில், இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து விட்டு, கொதிக்க வைத்த வென்னீரில் பன்னீரை போட்டு, 15 நிமிடம் ஊற வைக்கவும். அதன்பின் பன்னீரை நீரில் இருந்து எடுத்து, துருவி கொள்ளவும்.
அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து, பாலை ஊற்றவும். பால் கொதித்தவுடன் சர்க்கரை சேர்த்து, மீண்டும் கொதிக்க விடவும். பால் ஓரளவு கெட்டியான பின், பன்னீர் சேர்த்து கை விடாமல் கிளறவும்.
அதன்பின் ஏலக்காய் துாள், குங்குமப்பூபோடவும். நெய்யில் வறுத்த ட்ரை ப்ரூட்ஸ்களை சேர்த்து, 15 நிமிடம் கொதிக்க வைத்தால், இனிப்பான பன்னீர் பாயசம் தயார். குட்டீஸ்கள் முதல், பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். இந்த பாயசம் இரண்டு நாட்கள் வரை கெடாது. பிரிஜ்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

