/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'என்கவுன்டர்' வழக்கு பிப்., 27ல் உத்தரவு
/
'என்கவுன்டர்' வழக்கு பிப்., 27ல் உத்தரவு
ADDED : பிப் 24, 2026 06:41 AM
பெங்களூரு: 'ஹூப்பள்ளியில் ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொன்ற குற்றவாளியை, போலீசார் என்கவுன்டர் செய்த வழக்கு தொடர்பான உத்தரவு, 27ம் தேதி அறிவிக்கப்படும்,' என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
தார்வாட் மாவட்டம் ஹூப்பள்ளியில் ஐந்து வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளியை என்கவுன்டர் செய்து போலீசார் பிடித்தனர்.
இச்சம்பவம் தொடர்புடைய அனைத்து போலீசாரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை சங்கத்தினர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனு தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி பூனாச்சா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், 'இவ்வழக்கு தொடர்பான உத்தரவு, வரும் 27 ம் தேதி அறிவிக்கப்படும்' என்றனர்.

