ADDED : ஜூலை 12, 2026 11:49 PM

ராய்ச்சூர்: ராய்ச்சூர் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., சையத் யாசின், ௭௦, உடல்நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார்.
ராய்ச்சூர் நகர தொகுதியில் இருந்து 1999, 2008 தேர்தல்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றவர் சையத் யாசின், 70. இவர், முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் ஜாபர் ஷெரீப்பின் மருமகன்.
மனைவி, மகன்களுடன் பெங்களூரில் வசித்த சையத் யாசினுக்கு, சில நாட்களுக்கு முன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.
இறுதி சடங்கிற்காக அவரது உடல் சொந்த ஊரான ராய்ச்சூருக்கு எடுத்து செல்லப்பட்டது. மாநில சிறுபான்மையினர் மேம்பாட்டு கழக தலைவராக பணியாற்றிய சையத் யாசின், கட்சியிலும் பல பொறுப்புகளை வகித்துள்ளார்.
இவரது மறைவுக்கு முதல்வர் சிவகுமார், காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
