/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
டிராக்டர் விபத்தில் நான்கு பேர் பலி
/
டிராக்டர் விபத்தில் நான்கு பேர் பலி
ADDED : பிப் 22, 2026 05:27 AM
பாகல்கோட்: பாகல்கோட் மாவட்டம், ஜமகன்டி தாலுகா, கட்டகெரே ஏரி அருகே, நேற்று அதிகாலை 2:00 மணியளவில், டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, டிராக்டரின் டிராலி துண்டாகி பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் பயணித்த மனீஷ்பான்டே, 23, லட்சுமி சிரமடி, 27, ரேகா பூகே, 25, ஹலகி பான்டே, 2, ஆகியோர் உயிரிழந்தனர்.
இவர்கள் மஹாராஷ்டிரா மாநிலம் யாவத்மால் மாவட்டம், பூசா தாலுகாவில் உள்ள குபவாடி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள், கரும்பு வெட்டும் பணிக்காக, குழந்தையுடன் பெலகாவி மாவட்டத்தின் யரகட்டி கிராமத்துக்கு வந்திருந்தனர்.
பணி முடிந்து டிராக்டரில், பாகல்கோட் வழியாக சொந்த ஊருக்கு திரும்பும் போது, விபத்து நிகந்தது. இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்து, மருத்துவமனை யில் சிகிச்சை பெறுகின்றனர்.தகவலறிந்த ஜமகன்டி போலீசார், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். வி பத்து குறித்து வழக்கு பதிவு செய்தனர்.

