sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

துப்பாக்கி முனையில் தங்க நகை கொள்ளை

/

துப்பாக்கி முனையில் தங்க நகை கொள்ளை

துப்பாக்கி முனையில் தங்க நகை கொள்ளை

துப்பாக்கி முனையில் தங்க நகை கொள்ளை


ADDED : ஜூலை 27, 2025 05:08 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாதநாயக்கனஹள்ளி: நகைக்கடையில் துப்பாக்கி முனையில் 250 கிராம், நகைகளை கொள்ளையடித்த, மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெங்களூரு ரூரல் மாதநாயக்கனஹள்ளி அருகே மச்சோஹள்ளி கேட் பகுதியில், 'ராஜ் ஜுவல்லர்ஸ்' என்ற நகைக்கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் ராஜஸ்தான் மாநிலத்தின் கன்னையா லால். நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு வியாபாரம் முடிந்ததும் கடையை மூட, லாலும், கடையில் வேலை செய்யும் ஊழியரும் தயாராக இருந்தனர்.

அப்போது முகமூடி அணிந்து, நகைக்கடைக்குள் புகுந்த மூன்று நபர்கள், லால், ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டினர். கண்ணிமைக்கும் நேரத்தில் 250 கிராம் நகைகளை, கொள்ளையடித்து விட்டுத் தப்பினர். இந்த காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டு இருந்த, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கொள்ளையர்களை மாதநாயக்கனஹள்ளி போலீசார் தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us