ADDED : பிப் 01, 2026 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: பெங்களூரு தொழிலதிபர் ராயின் தற்கொலை வழக்கை விசாரிக்க, எஸ்.ஐ.டி.,க்கு அரசு உத்தரவிடப்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் கான்பிடென்ட் குழும நிறுவனர் சி.ஜே.ராய், தனது வீட்டில், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவ்வழக்கை அரசின் உத்தரவின்படி, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழுவுக்கு, நகர போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங்கை ஒப்படைத்தார்.
இக்குழுவில், நகர மேற்கு பிரிவு இணை கமிஷனர் வம்ஷி கிருஷ்ணா, தெற்கு பிரிவு இணை கமிஷனர் லோகேஷ் ஜகலசர், மத்திய பிரிவு துணை கமிஷனர் அக் ஷய் ஹகே, சி.சி.ஆர்.பி., ராமசந்திரா, அசோக் நகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

