ADDED : ஜூன் 17, 2026 11:13 PM
அ நிறம் | அளவு
கோலார்: அரசு கன்னட மேல்நிலைப்பள்ளியின் கூரை இடிந்து விழுந்தது. இதில், இந்த பள்ளியின் தலைமையாசிரியை காயம் அடைந்தார். மாணவர்கள் காயமின்றி தப்பினர்.
கோலாரில், அரசு கன்னட மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதன் கூரை சிதிலமடைந்த நிலையில் இருந்தது. நேற்று முன்தினம் அதன் காரை விழுந்ததில் பள்ளியின் தலைமையாசிரியை யசோதா என்பவரின் தலை, கையில் காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் மயக்கம் அடைந்தார்.
உடனடியாக சிகிச்சைக்காக அவர், கோலார் எஸ்.என்.ஆர்., மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவர் குணமடைந்துள்ளார்.
கூரையின் சிமென்ட் காரை விழுந்த போது, மாணவர்கள் சற்று தொலைவில் அமர்ந்திருந்தனர். இதனால், அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
