/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காய்ந்த மரக்கிளைகள் குறித்து தகவல் அளிக்க 'ஹெல்ப்லைன்'
/
காய்ந்த மரக்கிளைகள் குறித்து தகவல் அளிக்க 'ஹெல்ப்லைன்'
காய்ந்த மரக்கிளைகள் குறித்து தகவல் அளிக்க 'ஹெல்ப்லைன்'
காய்ந்த மரக்கிளைகள் குறித்து தகவல் அளிக்க 'ஹெல்ப்லைன்'
ADDED : பிப் 05, 2026 06:55 AM
பெங்களூரு: பெங்களூரு சென்ட்ரல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காய்ந்த நிலையில் உள்ள மரக்கிளைகள் குறித்து தகவல் அளிப்பதற்கு உதவி எண்கள் வழங்கப்பட்டு உள்ளன.
பெங்களூரு சென்ட்ரல் மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரு சென்ட்ரல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு, தனியாருக்கு சொந்தமான இடங்களில் காய்ந்த நிலையில் உள்ள மரங்கள், அவற்றின் கிளைகள் வனத்துறையால் அகற்றப்பட்டு வருகின்றன. இருப்பினும், பல பகுதிகளில் காய்ந்த மரங்களின் கிளைகள் உள்ளதாக புகார்கள் வந்து உள்ளன.
இந்த மரக்கிளைகள் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்தை ஏற்படுத்தலாம். எனவே, மக்கள் தங்கள் பகுதியிலுள்ள காய்ந்த மரக்கிளைகள் குறித்து தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 1533, 77609 33913, 91645 97895 என்ற உதவி எண்களை அழைத்து தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

