/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாவோயிஸ்ட் ஆதரவாளருக்கு ஜாமின் மறுத்த உயர் நீதிமன்றம்
/
மாவோயிஸ்ட் ஆதரவாளருக்கு ஜாமின் மறுத்த உயர் நீதிமன்றம்
மாவோயிஸ்ட் ஆதரவாளருக்கு ஜாமின் மறுத்த உயர் நீதிமன்றம்
மாவோயிஸ்ட் ஆதரவாளருக்கு ஜாமின் மறுத்த உயர் நீதிமன்றம்
ADDED : மே 09, 2025 11:37 PM
பெங்களூரு: மாவோயிஸ்ட் ஆதரவாளருக்கு ஜாமின் வழங்க, உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மத்திய அரசால் 2009ல் தடை விதிக்கப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக, கட்டுரை எழுதி சமூக வலைதளங்களில் வெளியிட்டதுடன், அமைப்புக்கு ஆள்சேர்ப்பு, நிதி திரட்டும் பணியில் ஈடுபட்ட, ஹரியானா மாநிலத்தின் அனிருத் ராஜன், 35, என்பவர், கடந்த ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி பெங்களூரில் கைது செய்யப்பட்டார். தற்போது பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமின் கேட்டு அனிருத் ராஜன் தாக்கல் செய்த மனுவை, விசாரணை நீதிமன்றம் நிராகரித்தது. இதனால் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் சீனிவாஸ் ஹரிஷ் குமார், ஹேமலேகா விசாரித்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நேற்று முன்தினம் மனுதாரருக்கு ஜாமின் வழங்க மறுத்து உத்தரவிட்டனர்.

