sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது

/

மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது

மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது

மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது

1


ADDED : அக் 18, 2025 11:08 PM

Google News

ADDED : அக் 18, 2025 11:08 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹெப்பகோடி: நடத்தையில் சந்தேகத்தில், மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்று, மின்சாரம் பாய்ந்து இறந்ததாக நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு, ஹெப்பகோடியை சேர்ந்தவர் ரேஷ்மா, 37. இவரது கணவர் சில ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். தன் 15 வயது மகளுடன், ரேஷ்மா தனியாக வசித்தார். இன்ஸ்டாகிராம் மூலம் ரேஷ்மாவுக்கும், பிரசாந்த், 33, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இருவரும் ஒன்பது மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில், 15ம் தேதி வீட்டின் குளியல் அறையில், ரேஷ்மா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

குளியல் அறைக்கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. மின்சாரம் பாய்ந்து மனைவி இறந்ததாக, அக்கம்பக்கத்தினரிடம் பிரசாந்த் கூறினார். ஆனாலும் தாயின் சாவில் சந்தேகம் இருப்பதாக, ரேஷ்மாவின் மகள், போலீசிடம் கூறினார்.

போலீசார், பிரசாந்திடம் விசாரித்தனர். நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்று, மின்சாரம் பாய்ந்து இறந்ததாக நாடகமாடியதை ஒப்புக் கொண்டார். அவர் நேற்று கைது செய்யப்பட்டார்; விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us