ADDED : அக் 16, 2025 11:16 PM

சிக்கமகளூரு: சிக்கமகளூரில் நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியை கொலை செய்துவிட்டு, தலைமறைவான கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிக்கமகளூரு மாவட்டம், அஜ்ஜம்புராவின் சிக்கனவங்கலா கிராமத்தை சேர்ந்தவர் தனு, 25. இவரது கணவர் ரமேஷ். இவர்களுக்கு ஆறு வயதில் மகன் உள்ளார்.
மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ரமேஷ், அவருடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் கோபமடைந்த தனு, கணவரை விட்டுப் பிரிந்து, இரண்டு ஆண்டுகளாக அதே கிராமத்தில் மகனுடன் தனியாக வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் தனுவின் வீட்டுக்குச் சென்ற ரமேஷ், மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது தான் கொண்டு வந்திருந்த கத்தியால், தனுவை சரமாரியாக குத்திவிட்டு, ரமேஷ் தப்பியோடிவிட்டார்.
தனு வீட்டில் இருந்து ரமேஷ் ஓடுவதை பார்த்த அக்கம் பக்கத்தினர், அங்கு சென்று பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் தனு இறந்துகிடந்தார். உடனடியாக அஜ்ஜம்புரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீசார், தனுவின் சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர். தலைமறைவான ரமேசை தேடி வருகின்றனர்.