sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

மனைவியை கொன்றதாக கணவர் மீது பொய் வழக்கு இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ.,க்கள் 'சஸ்பெண்ட்'

/

மனைவியை கொன்றதாக கணவர் மீது பொய் வழக்கு இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ.,க்கள் 'சஸ்பெண்ட்'

மனைவியை கொன்றதாக கணவர் மீது பொய் வழக்கு இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ.,க்கள் 'சஸ்பெண்ட்'

மனைவியை கொன்றதாக கணவர் மீது பொய் வழக்கு இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ.,க்கள் 'சஸ்பெண்ட்'


ADDED : ஜூலை 01, 2025 03:44 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 03:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: மனைவியை கொன்றதாக கணவர் மீது பொய் வழக்கு சுமத்திய சர்க்கிள் இன்ஸ்பெக்டர், இரண்டு சப் - இன்ஸ்பெக்டர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

மைசூரு, பிரியபட்டணா தாலுகா, பெட்டடபுரா பகுதியின் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் சுரேஷ், 39. இவரது மனைவி மல்லிகே.

இவர், கணேஷ் என்பவருடன் ஊரை விட்டு ஓடி விட்டதாக, 2020ல் குஷால்நகர் போலீசில், அவரது கணவர் சுரேஷ் புகார் செய்தார்.

குற்றப்பத்திரிகை


அதே சமயம், மல்லிகேவின் தாய் கவுரி, தனது மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புகார் அளித்தார். ஏழு மாதங்களுக்கு பின், 2021ல் பிரிய பட்டணா அருகில் ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

பெட்டடபுரா போலீசார் விசாரணை நடத்தினர். இந்த எலும்புக்கூடு, மல்லிகேவின் உடையது என கருதி, அவரது கணவர் சுரேஷ் தான் கொலையாளி என, போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். அவர், சிறையில் அடைக்கப்பட்டார்.

இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்த அவர், ஜாமினில் வெளியே வந்தார். நடப்பாண்டு ஏப்ரலில், தன் நண்பர்களுடன் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அங்கிருந்த ஒரு பெண்ணை பார்த்து, சுரேஷின் மனைவி போன்றிருப்பதாக, அவரது நண்பர் கூறினார். சுரேஷும் அருகில் சென்று பார்த்தார். அப்பெண், தன் மனைவி என்பதை உறுதி செய்தார்.

அந்த பெண்ணை, போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். இவ்விஷயம் வெளியே தெரிந்ததும், மைசூரில் உள்ள ஐந்தாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

ஆஜர்


விசாரணையின்போது, மல்லிகே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை தவறானது என நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து, சுரேஷ் நிரபராதி எனவும், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரில் நடந்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூட்டத்தில் சுரேஷ் வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.

இதன்படி, பெட்டடபுரா போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய குஷால் நகர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், எலவாலா போலீஸ் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார், ஜெயபுரா போலீஸ் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் பிரகாஷ் யெட்டினமனே ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us