/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பாலியல் வழக்கில் போதிய ஆதாரம் இல்லை! முருகா சரணரு உட்பட 3 பேர் விடுவிப்பு
/
பாலியல் வழக்கில் போதிய ஆதாரம் இல்லை! முருகா சரணரு உட்பட 3 பேர் விடுவிப்பு
பாலியல் வழக்கில் போதிய ஆதாரம் இல்லை! முருகா சரணரு உட்பட 3 பேர் விடுவிப்பு
பாலியல் வழக்கில் போதிய ஆதாரம் இல்லை! முருகா சரணரு உட்பட 3 பேர் விடுவிப்பு
ADDED : நவ 27, 2025 07:36 AM

பெங்களூரு: இரு மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் போதிய சாட்சிகள், ஆதாரங்கள் இல்லாததால், மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு உட்பட மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
சித்ரதுர்கா முருகா மடம் சார்பில் விடுதி நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாணவ - மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். 2022 ஆக., 26ல், மைசூரு நசர்பாத் போலீஸ் நிலையத்தில், மைசூரு ஒடநாடி சங்கத்தின் உதவியுடன், இரு மாணவியர் புகார் அளித்தனர். இதில், 'முருகா மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, 65, எங்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கிறார். அவருக்கு, வார்டன் ராஷ்மி, இளைய மடாதிபதி பசவ ஆதித்யா, மடத்துடன் தொடர்புடைய மைசூரை சேர்ந்த பரமசிவய்யா, வக்கீல் கங்காதரய்யா ஆகியோர் உதவியாக உள்ளனர்' எ ன, குறிப்பிட்டிருந்தனர்.
அவர்கள் மீது வழக்குப் பதிவானது. இவ்வழக்கு, சித்ரதுர்கா ரூரல் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. 2022 செப்., 1ல் மடாதிபதி முருகா சரணரு கைது செய்யப்பட்டார். 14 மாதங்கள் சிறையில் இருந்த நிலையில், அவருக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்தது.
சித்ரதுர்கா இரண்டாவது மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், நீதிபதி கங்காதர் சன்னப சப்பா ஹடபடா முன்னிலையில் இவ்வழக்குகளின் விசாரணை நடந்து வந்தது.
போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், இளைய மடாதிபதி பசவ ஆதித்யா, வக்கீல் கங்காதரய்யா பெயரை நீக்கி விட்டனர்.
நவ., 18ல் இறுதிக்கட்ட விசாரணை முடிந்த பின், நவ., 26ம் தேதி தீர்ப்பு அளிப்பதாக நீதிபதி அறிவித்திருந்தார். நேற்று காலை குற்றஞ்சாட்டப்பட்ட முருகா சரணரு உட்பட மூவரும் ஆஜராகினர். ஆனால் மதியம் 3:00 மணிக்கு தான் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதி, 'பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் போதிய சாட்சிகள், ஆதாரங்கள் இல்லாததால், மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, ராஷ்மி, பரமசிவய்யா ஆகியோர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது' என, அறிவித்தார்.
தீர்ப்புக்கு பின் வெளியே வந்த முருகா சரணரு, ஊடகத்தினரிடம் எதுவும் பேசாமல், நேராக தாவணகெரேயில் உள்ள விரக்தா மடத்துக்கு சென்றுவிட்டார்.
அங்கு மடத்தின் வெளியே அவரது பக்தர்கள் திரண்டு, அவருக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர்.
இதுபோன்று 12 வயது சிறுமி ஒருவர், அவர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார். இவ்வழக்கு விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

