ADDED : மே 17, 2025 11:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: காங்கிரஸ் அரசு மாநிலத்தில் ஆட்சிக்கு வந்து வரும் 20ம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதை கொண்டாடும் வகையில், விஜயநகர மாவட்டம் ஹொஸ்பேட்டில் வரும் 20ம் தேதி சாதனை மாநாடு நடக்கிறது.
இதுதொடர்பாக, ஹூப்பள்ளியில் நேற்று பா.ஜ., - எம்.பி., ஜெகதீஷ் ஷெட்டர் அளித்த பேட்டி:
தொகுதி மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதி இல்லை என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூறுகின்றனர். இந்நேரத்தில் இம்மாநாடு அவசியமா; எதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது?
இந்திய ராணுவத்தின் சாதனையை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும், அமைச்சர்களும் தேவையின்றி அறிக்கை விடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.