தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கர்நாடக பா.ஜ., குழப்பம் விரைவில் தீரும்: சுரேஷ் கவுடா நம்பிக்கை

 கர்நாடக பா.ஜ., குழப்பம் விரைவில் தீரும்: சுரேஷ் கவுடா நம்பிக்கை

 கர்நாடக பா.ஜ., குழப்பம் விரைவில் தீரும்: சுரேஷ் கவுடா நம்பிக்கை


ADDED : ஜூலை 01, 2026 08:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 08:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''கட்சியில் நிலவும் குழப்பத்திற்கு, இரண்டு மாதத்தில் தீர்வு கிடைக்கும்,'' என, துமகூரு ரூரல் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

துமகூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுக்கு எதிராக நான் எதுவும் பேசவில்லை. ஆடியோவில் இருப்பது எனது குரல் இல்லை என, முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா விளக்கம் அளித்துள்ளார். இதற்கு பிறகும் இந்த விஷயத்தை பற்றி பேசுவது சரியாக இருக்காது.

கர்நாடக பா.ஜ.,வில் குழப்பம் நிலவுவது உண்மை தான். இதற்கு இரண்டு மாதங்களில் தீர்வு கிடைக்கும். அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து வைக்கும் திறன், எங்கள் கட்சி மேலிட தலைவர்களுக்கு உள்ளது.

வரும், 2028 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராவோம் என்று சிவகுமார் பகல் கனவு காண்கிறார். மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவர். பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி, 175 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us