நேர்முக தேர்வு நடத்துவதில் கே.பி.எஸ்.சி., இழுபறி
நேர்முக தேர்வு நடத்துவதில் கே.பி.எஸ்.சி., இழுபறி
நேர்முக தேர்வு நடத்துவதில் கே.பி.எஸ்.சி., இழுபறி
நேர்முக தேர்வு நடத்துவதில் கே.பி.எஸ்.சி., இழுபறி
ADDED : ஏப் 02, 2026 03:09 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: கர்நாடக அரசின் பல துறைகளின் காலியாக இருக்கும் அதிகாரி, ஊழியர்கள் பணியிடங்களை நிரப்ப, கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக பொது சேவை ஆணையம் தேர்வு நடத்துகிறது.
கடந்த 2024ம் ஆண்டு கே.ஏ.எஸ்., அதிகாரி பதவிக்காக குரூப் - ஏ, குரூப் - பி தேர்வு நடந்தது. இதில் வெற்றி பெற்ற 384 பேருக்கு நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.
மார்ச் 23ம் தேதி முதல் மே 4ம் தேதி வரை, நேர்முக தேர்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் கே.பி.எஸ்.சி., நேர்முக தேர்வுக்கான அறிவிப்பை திரும்ப பெற்றது. விரைவில் புதிய தேதி அறிவிப்போம் என்றும் கூறினர். ஆனால் இதுவரை எந்த தேதியும் வெளியிடாமல் அலட்சியமாக உள்ளனர்.
இதனால் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். தேர்வு எழுதி முடிவுகள் எப்போது வெளியாகும் என்று இரண்டு ஆண்டுகள் காத்து இருந்தோம். இப்போது நேர்காணல் எப்போது நடக்கும் என்று காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது என்று கூறினர்.


